Blog

/Blog

நற்றுணையாவது நமச்சிவாயவே!-1

 நான்காம் திருமுறை உரை பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக் கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே! திருமுறைகளின் அருமைப்பாடுகளை ஓதி உணரவும், உணர்ந்து பின்பற்றும் விதமாக தொடர்ந்து இயங்கி வருகிற அரனருள் அமைப்பினுடைய பன்னிரு திருமுறை திருவிழாவில் கலந்துகொண்டு நான்காம் திருமுறை நன்நாளாகிய இன்று நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் நாவுக்கரசர் பெருந்தகையினுடைய அருளிச்செயல்கள் சிலவற்றை ...

சொல்

சொல்லோ என்றும் புதியது சொல்லொணாத பழையது கல்லில் எழுத்தாய்ப் பதிவது கனலில் புடமாய் ஒளிர்வது நெல்மேல் சிறுவிரல் வரைவது நெருநலும் நாளையும் நிகழ்வது எல்லாம் சொல்லி நிறைவது இன்னும் சொல்ல முயல்வது ...

குரு சந்நிதி

ஒளிவந்த பின்னாலும் இருள்வாழுமா ஒவ்வாத சொந்தங்கள் உடன்வாழுமா வெளியேறி நாம்காண வானமுண்டு வெளிவந்து திசைகாணும் ஞானமுண்டு கருவங்கள் கண்டாலும் காணாமலே கண்மூடி நாம்வாழ்ந்தோம் நாணாமலே பருவங்கள் திசைமாறும் பொழுதல்லவா பகையின்றி நடையேகல் நலமல்லவா காற்றோடு நான்சொன்ன கதையெத்தனை கண்ணார நான்பார்த்த வகையெத்தனை நேற்றோடு கிரணங்கள் நீங்கட்டுமே நிலவிங்கு தன்பாதை நடக்கட்டுமே சுயமாக அகல்கொண்டு சுடரேற்றலாம் சுகமான நினைவோடு வழிபோகலாம் தயவென்ன பயமென்ன இனிநிம்மதி தயக்கங்கள் தீரத்தான் குருசந்நிதி மரபின் மைந்தன் முத்தையா ...

ஆனந்த அலை

நிழல்தேடி நின்றதனால் நிஜம் மறந்தது- எனை நிஜம்தேடி வந்தபின்னும் நிழல்சூழ்ந்தது மழைதேடி வந்தபின்னும் செடிகாயுமோ-என் மாதேவனடிசேர்ந்தால் இருள்சேருமோ பகட்டான பந்தல்கள் நிழலல்லவே-அதில் பலநூறு ஓட்டைகள் சுகமல்லவே திகட்டாத அமுதுக்கு நானேங்கினேன் -அதன் திசைசேர்ந்த பின்னால்தான் நான்தூங்கினேன் ஒளிவீசும் இருள்நின்ற ஒய்யாரமும் -அது ஒன்றேதான் கிழக்கென்னும் வியாபாரமும் வெளிவந்த பின்னாலே வலியெத்தனை-நான் விழிமூடமுடியாத இரவெத்தனை குருவென்னும் அருள்ரூபம் கைதந்தது- அதன் கனிவான கழலின்கீழ் நிழல்தந்தது உருவான மௌனத்தில் உயிர்வாழ்ந்தது- பலர் உணராத ஆனந்த அலைபாய்ந்தது மரபின் மைந்தன் முத்தையா ...

நிலவெழவே செய்த நிலவு

கையிற் கரும்பிருக்க கண்ணில் கனிவிருக்க மெய்யிற்செம் பட்டுடைய மேன்மையினாள்- உய்யவே நன்றருளும் நேய நிறையுடையாள் சந்நிதியில் நின்றருளும் கோலத்தி னாள் நாளிற் கதிராய் நிசியில் நிலவாகி கோள்கள் உருட்டுகிற கைகாரி -தாளில் மலர்கொண்ட நாயகி மங்கையபி ராமி நிலவெழவே செய்த நிலவு. நிலவும் இரவினிலே நீலச் சுடராய் உலவுகிற உத்தமியாள் உண்டே- கலக்கம் துடைக்கின்ற பார்வை துணையானால் வாழ்வில் கிடைக்காத ஒன்றுண்டோ கூறு. கூறானாள் கூத்தனுக்கு கூற்றுதைத்தாள் மார்க்கங்கள் ஆறானாள் யாவுமே ஆனாளே -வேறாய் வருத்தும் வினைவிழவே ...

அன்புள்ள ஆசிரியர்களே – 8

கல்வி நிலையங்களின் விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம், மாணவ மாணவியருக்குப் பரிசளிக்கச் சொல்வார்கள். பரிசு வாங்கும் பிள்ளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அறிவிப்புகள் ஆரம்பமாகும். முதல் பரிசு – இரண்டாம் பரிசு – மூன்றாம் பரிசு. அப்புறம் “ஆறுதல் பரிசு.” முதல் மூன்று வெற்றியாளர்களை கண்டறிகிறீர்கள். அடுத்ததாகவும் ஒரு பரிசை அளிக்கிறீர்கள். ஏனென்றால், அந்தக் குழந்தையிடம் ஒரு தனித்தன்மை இருக்கிறது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பக்கமாக வந்திருக்கிறது. மேலும் முயன்றால், அதனால் இன்னும் சிறப்பாக செயல்படமுடியும் என்று உணர்கிறீர்கள். அதை அங்கீகரிக்கும் விதமாய் ...
More...More...More...More...