மரபின் மைந்தன் பதில்கள்
தகுதி இல்லாதவர்களிடம் பணிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது? – மீ.மணியன், வெண்ணந்தூர் தகுதி என்பது சூழலுக்கேற்ப பொருள் மாறுபடக்கூடிய சொல். முதலாளி, தொழிலாளி எனும் இரண்டு சொற்களுமே ஏதோ ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்னும் விதமாய் நினைக்கத் தொடங்கிவிட்டோம். முதலை ஆள்பவன் முதலாளி. தொழிலை ஆள்பவன் தொழிலாளி. எனவே, நீங்கள் குறிப்பிடும் “தகுதி இல்லாதவர்” என்பவர் முதலாளியாகவும் இருக்கலாம். மேலதிகாரியாகவும் இருக்கலாம். ஒருவருடைய தகுதியின்மையை நிரூபிக்கும் வழி, தன்னுடைய தகுதியைத் தானே நிலைநாட்டுவதுதான். எனக்குத் ...
மரபின் மைந்தன் பதில்கள்
வேலைவாய்ப்பில் உண்மையுடன் இருப்பவர்க்கு மதிப்பு இல்லையே… எப்படி இதனை சகிப்பது? -ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம் வேலை ஒரு வாய்ப்பு என்பதை நீங்களே உங்கள் கேள்வியில் சொல்லிவிட்டீர்கள். உங்கள் உண்மையை பயன்படுத்தும் வாய்ப்பை, வேலை கொடுத்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் போகலாம். ஆனால் வேலை அனுபவங்கள் என்னும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் வேலைத்திறனை இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம். பல புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ளலாம். காலம் கனிகிறபோது, உங்களை முழுமையாய் மதிக்கும் இடத்தில் வேலை பெறுவராகவோ, அல்லது பத்துப்பேர்களுக்கு வேலை ...
மரபின் மைந்தன் பதில்கள்
தமிழகமெங்கும் பல சுய முன்னேறப் பயிலரங்குகள் நடைபெறுகின்றன. நீங்கள்கூட சமீபத்தில் மதுரையில் நடந்த சுயமுன்னேற்றப் பயிலரங்கில் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். இதுபோன்ற பயிலரங்குகளின் பயனென்ன என்பதை விளக்க முடியுமா? -பாண்டியன், மதுரை. ஆழமான இந்தக் கேள்விக்கு நீளமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சுய முன்னேற்றப் பயிலரங்குகளால் என்ன பயனென்ற கேள்விகள் வெவ்வேறு தளங்களில் இருந்தும் எழுந்து கொண்டேயிருக்கின்றன. சுய முன்னேற்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் முன்னேறிவிடுவார்களா என்று சிலரும் சுய முன்னேற்ற நூல்கள் வாசிப்பதால் வளர்ச்சி வருமா என்று ...
மரபின் மைந்தன் பதில்கள்
பெரியவர்களைப் பார்த்து வியக்கக்கூடாதென்று சங்க இலக்கியம் சொல்கிறதாமே? டி.சுரேஷ், மதுரை ஆமாம். சிறிய குணங்கள் உள்ளவர்களை இகழவே கூடாதென்றும் சொல்கிறது. மனிதர்களின் செயல்களைப் பாராட்டவோ இகழவோ செய்யலாம். மனிதர்களைப் பாராட்டுவதோ இகழ்வதோ அவசியமில்லை என்றுதான் இதைப் பொருள் கொள்ள வேண்லிம். “பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்கிறார் சங்கப்புலவர். நீங்கள் இசை ரசிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்காத இசைக் கருவி எது? இளங்கோவன், தஞ்சை. ஜால்ரா! இதுவரை நீங்கள் ...
மரபின் மைந்தன் பதில்கள்
ஒரு மனிதருக்கு குரு தேவையா? முத்துக்குமார், கணபதி குரு தேவை என்கிற தெளிவு ஏற்பட்டுவிட்ட மனிதருக்கு கண்டிப்பாகத் தேவை. தேவை ஏற்படும்போது தேடல் தானாக ஏற்படும். கண்ணும் கருத்துமாய், ஒரு வேலையைச் செய்தால்கூட அப்படிச் செய்யும் எல்லோர்க்கும் அதற்கான வெற்றியோ அங்கீகாரமோ கிடைத்துவிடுவதில்லை. இதுதான் தலைவிதியா? தனுஷ்கோடி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், ஸ்ரீவில்லிபுத்தூர். இதை விதி என்று ஒதுக்கிவிட முடியாது. எந்த ஒரு செயலுக்குமான அங்கீகாரத்திற்கென ஓர் அடிப்படை விதி உண்டு. செய்யப்படும் செயல், அதை செய்கிற ...
மரபின் மைந்தன் பதில்கள்
நேர நிர்வாகத்தை நீங்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டீர்கள்? கே.பைரவன், சென்னை – 24 நேரத்திடம் இருந்துதான். சில விஷயங்களைத் திட்டமிடுகிறோம். ஆனால் நடைமுறைப்படுத்துகையில் சொதப்பி விடுகிறோமே… ஏன்? ஆர்.சந்திரன், சிவகாசி திட்டமிடும்போது நம்முடைய கோணத்தில் மட்டுமே பார்க்கிறோம். நடைமுறைப் படுத்தும்போது அடுத்தவர்கள் கோணமும் முக்கியப் பங்கு வகிக்கையில் சில தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தை மற்றவர்களுடைய கோணத்திலிருந்தும் பார்த்து திட்டமிடத் தெரிந்தால் தவறுகள் நேராது. ...