Blog

/Blog

பசும்புல் சித்திரங்கள்- வறுமையின் பசுமை

நீங்கள்  கடந்த இருபதாண்டுகளாகக் கோவையின் இலக்கிய உலகுடன் பரிச்சயம் கொண்டவராக இருந்தால் கோவை பழநிசாமி என்னும் பெயரையோ அப்பெயர் கொண்ட மனிதரையோ ஒருமுறையேனும் கடந்து வந்திருக்கக் கூடும். விஜயா பதிப்பகத்தில்,வேனில் கிருஷ்ணமூர்த்தியின் நந்தினி அச்சகத்தில்,கோவையில் பரவலாக நடைபெறும் பற்பல இலக்கியக் கூட்டங்களில்,அவர் அடிக்கடி தட்டுப்படுவார். அணை போட முடியாத ஆர்வக்காரர். தன் சட்டைப்பையிலோ கால்சட்டைப் பையிலோ சமீபத்தில் அவர் எழுதிய கவிதையை எப்போதும் இருப்பில் வைத்திருப்பார். பாரத ஸ்டேட் வங்கியில் நல்ல பணியில் இருந்தவர்.அதன் தொழிற்சங்கத்திலும் முக்கியப் ...

லிமரிக் எனும் சுவாரசியம்

( அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான எழுத்துச் சரக்கு, லிமரிக். இந்த வடிவத்தில் தமிழில் எத்தனையோ ஆண்டுகளாய் லிமரிக் கவிதைகள் இயங்குகின்றன. முகநூலில் இயங்கும் லிமரிக் குழுவில் நானெழுதிய லிமரிக்குகள் சில) மிதிவண்டி பழகிவிட்டா மிகவுமது சொகுசு மிகுதியா வண்டிகளோ மார்க்கெட்டில் புதுசு அதுபோல்தான் லிமரிக்கா அதனூரா அமெரிக்கா எதுவானா என்னங்க எழுதினா கைகூடும் தினுசு   கூடையிலே சரம்சரமாய் கோர்த்தமலர் கிடக்க கூந்தலுமே காற்றினிலே கண்மறைத்துப் பறக்க கோடையிலே நடப்பாள் கூவிக்கூவி சலிப்பாள் வாடைமலர் வாசம்தாண்டி வேர்வையெங்கும் மணக்க ...

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -4 (நிறைவுப் பகுதி)

சிறுகதையின் வடிவம்தான் அதன் வெற்றியின் மிக முக்கியமான அம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் கவிதையொன்றில் “முடிக்கத் தெரியாத சிறுகதையை குறுநாவல் என்று கூப்பிட்ட மாதிரி” என்று கிண்டல் செய்தகவிஞர் வைரமுத்து தன்சிறுகதைகளை மிக நேர்த்தியாகக் கொண்டு செலுத்துகிறார் என்பது நான் வாசித்துணர்ந்த ஒன்று . இங்கு நான் செய்நேர்த்தியை சொல்லவில்லை.நிரம்பிய குடத்தை அலுங்காமல் எடுத்து இடுப்பில் வைப்பது போல,சிந்தாமல் சிதறாமல் இவரால் கதைசொல்ல முடிகிறது. திருமணத்திற்கு முன் தன் ஆண்மை குறித்து ஐயம் கொண்ட இளைஞன் ...
வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -3

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -3

விமர்சனக் கோட்பாடுகள் என்பவை நேரடியாகச் சொன்னால் வாசிப்பின் கூரிய எதிர்வினைகள். தொடர் வாசிப்பிற்குப் பழகியவர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தின் விளைவாய் அத்தகைய கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள்.நான் கோட்பாடுகளை இரண்டாம் பட்சமாகக் கருதக் காரணமே அந்த அளவுகோல்கள் பெரும்பாலும் ஒரே சுருதியில் இயங்கும் விதமாக ஓர் எல்லையை உருவாக்கும் என்பதுதான். இமயமலை இத்தனை அடிகள் உயரம் என்று அளந்து சொல்லும் கருவி மலையென்றாலே இத்தனை அடிகள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறது.அந்த அளவுகோலின்படி விந்தியம் ஒரு மலையல்ல. ஆல்ப்ஸ் ஒரு ...
வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -2

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -2

“உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா, கரி இருக்கா, மஞ்சள் இருக்கா, மிளகாய்ப்பொடி இருக்கா” என்று கேட்பது போல “உங்க கதையிலே குறிப்பமைதி இருக்கா, வடிவ அமைதி இருக்கா, கூற்றமைதி இருக்கா” என அடுக்கிக் கொண்டு போகிறார் ஜெயமோகன். அவையெல்லாம் சிறுகதையின் எத்தனையோ பண்புகளில் சிலமட்டுமே. சிறுகதையில் கதை இருப்பதும் கலையம்சம் இருப்பதும், வாசிப்பவனுக்கு அதிலிருந்து பெற்றுக் கொள்ள சில அம்சங்கள் இருப்பதும் முக்கியம்.வைரமுத்து சிறுகதைகளில் இவையெல்லாம் உண்டு. குறிப்பிட்ட சில பண்புகள் இருந்தால்தான்  அது ...
வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -1

வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -1

வைரமுத்து சிறுகதைகள் தொடர்பான பட்டிமன்றம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையொட்டி ஜெயமோகனின் தளத்தில் திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் கேள்வி கேட்டிருந்தார், அதற்கு ஜெயமோகன் தன் அபிப்பிராயங்களை எழுதியிருந்தார், http://www.jeyamohan.in/80619 திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் யாரென எனக்குத் தெரியாது. ஜெயமோகனிடமே கேட்டேன். இலங்கையைச் சேர்ந்த இலக்கியவாதி என்றார்.இதற்குமுன் சில நூல்களைப் பற்றி ஜெ.யின் கருத்தைக் கேட்டு கடிதமெழுதியுள்ளாராம். எனக்கு இந்த அனோஜன், கோவையைச் சேர்ந்த ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் எனும் எழுத்தாளரின் நண்பராகவோ வாசகராகவோ இருக்கக் கூடும் என்று தோன்றியது.ஏனெனில் பட்டிமன்றம் ...
More...More...More...More...