முனைவர் த ராஜாராம்
மடி நிறைய தானியங்களுடன், விதைக்கும் விருப்பமுடன் கழனிக்கு வருபவர்கள் தான் எல்லோரும் . அவர்கள் விரும்பிய விதமாய் விதை விதைத்து எண்ணம் போலவே பயிர் வளர்த்து விதமாய் மகசூல் காண்பவர்கள் எத்தனை பேர்? மேற்கொண்ட பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடித்தோம் என்னும் நிறைவு கொண்டவர்கள் எத்தனை பேர்? இந்தக் கேள்விகளுடன்தான் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் தரும் பங்களிப்பை நாம் எடைபோட வேண்டியிருக்கிறது. உயர்ந்த ரசனையும் ...
வளைக்கைகள் அகலேந்தி வருக
திரிமீது ஒளிமேவும் தருணம் திசையெட்டும் அழகாக ஒளிரும் விரிகின்ற இதழ்போல சுடரும் விரிவானின் விண்மீனாய் மிளிரும் விழியோடு சுடரேந்தி வருக வளைக்கைகள் அகலேந்தி வருக எழிலான கோலங்கள் இடுக எங்கெங்கும் ஆனந்தம் நிறைக கதிர்வேலன் மயில்வந்து ஆட கலைவாணி யாழ்மீட்டிப் பாட மதிசூடும் திருவண்ணா மலையான் முற்றத்தில் மூவுலகும் கூட ஜகஜோதி யாய் மின்னும் இரவு ஜகங்காக்கும் மஹாசக்தி வரவு அகஜோதி அவளேற்றித் தருவாள் அவளேநம் உயிரெங்கும் நிறைவாள் ...
2018 நவராத்திரி – 10
சீறிய சிங்கத்தில் ஏறிய சக்திக்கு சந்ததம் வெற்றியடா-அவள் சங்கல்பம் வெற்றியடா கூறிய போற்றிகள் கூவிடும் வேதங்கள் கும்பிட்டு வாழ்த்துமடா-அவள் கொற்றங்கள் வெல்லுமடா பண்டோர் அசுரனைப் போரில் வதைத்தவள் புன்னகை ராணியடா-அவள் பல்கலை வாணியடா கண்டவர் நெஞ்சினைக் கோயிலாய்க் கொள்பவள் காருண்ய ரூபியடா – அவள் காலத்தின் சாவியடா எண்ணிய நன்மைகள்யாவும் நிகழ்வுற எங்கும் நலம்பெருக- சக்தி இன்றே அருள்தருக புண்ணியம் ஓங்கவும் பாவங்கள்நீங்கவும் பொன்மனம் இரங்கிடுக -எங்கள் புஜங்களில் இறங்கிடுக ...
2018 நவராத்திரி – 9
குறுநகையில் ஒளிகொளுத்தும் கடவூர்க்காரி குறுகுறுத்த பார்வையிலே கவிதை கோடி நறும்புகையில் குங்கிலியக் கலயன் போற்றும் நாதனவன் நாசியிலே மணமாய் நிற்பாள் குறும்புக்குக் குறையில்லை; ஆன போதும் குறித்தபடி குறித்ததெல்லாம் செய்வாள்- இங்கே மறுபடியும் வராவண்ணம் மறலி பாதை மறிக்கின்ற மஹாமாயே அருள்வாய் நீயே வெஞ்சமரே வாழ்க்கையென ஆகும் போதும் வடிவழகி திருமுன்னே நின்றால் போதும் விஞ்சிவரும்புகழ்நலனும் பெருமை யாவும் விருப்பங்கள் கண்முன்னே வந்து மேவும் நெஞ்சிலொரு ...
2018 நவராத்திரி – 8
சந்தனக் காப்பினில் குங்கும வார்ப்பென சக்தி திகழுகின்றாள் – எங்கள் சக்தி திகழுகின்றாள் வந்தனை செய்பவர் வாழ்வினில் பைரவி வெற்றி அருளுகின்றாள் – புது வெற்றி அருளுகின்றாள் அன்புக் கனலினைக் கண்ணில் சுமந்தவள் ஆற்றல் பெருக்குகின்றாள் – எங்கள் ஆற்றல் பெருக்குகின்றாள் துன்பச் சுவடுகள் தீர்த்து முடிப்பவள் தொட்டு மலர்த்துகிறாள் – உயிர் தொட்டு மலர்த்துகிறாள் பல்வகைப் பூக்களின் புன்னகைக் கோலத்தில் பைரவி மின்னுகிறாள் – லிங்க பைரவி மின்னுகிறாள் வெல்லும் வழிவகை சொல்லும் மவுனத்தில் வித்தகம் ...
2018 நவராத்திரி -7
வாழ்வினில் ஆசை வைப்பவர்க்கெல்லாம் வரமாய் வருபவள் நீ தாழ்வுகள் மாற்றி தவிசினில் ஏற்றி தாங்கும் கருணையும் நீ ஊழ்வினை எழுத்தை உடனே மாற்றும் உன்னத சக்தியும் நீ சூழ்ந்திடும் செல்வம் சுடர்விடும் வாழ்வை அருளுக திருமகளே பாற்கடல் நிலவே பகலெனும் ஒளியே பாதங்கள் தொழுகின்றோம் மாற்றங்கள் தருக மேன்மைகள் தருக மலரடி வணங்குகிறோம் ஆற்றல்கள் பெருக்கு ஆயுளைப் புதுக்கு அருளை நாடுகிறோம் நேற்றையும் இன்றையும் நாளையும் ...