Blog

/Blog

வானம் வழங்கும் பாடம்

சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி சூட்டைத் தெளிக்கும் வானம் காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே காத்துக் கிடக்கும் மேகம் பேரிகை போல இடியை முழக்கிப் பொழிய வளர்த்து வேளை வருகையில் வீசியடிப்பதே ஞானம்! உன்னில் திறமை உருவெடுக்கும் வரை உள்ளே பொறுமை வளர்ப்பாய் என்னவும் வலிமை என்பதைக் காட்ட ஏற்படும் தருணம்…. பொறுப்பாய் இன்னும் பொறுமை இன்னும் பொருமை என்கிற மந்திரம் ஜெபிப்பாய் மின்னும் சுடராய் முழுமை அடைந்தபின் மறைப்பவை மறைந்து ஜொலிப்பாய்! எல்லாம் தெரிந்தவர் இருப்பார் ...

நாளையென்ன? தேடு

கோடையென்றும் குளுமையென்றும் பருவநிலை மாறும் வாடிநின்ற நிலைமையொரு வீச்சினிலே தீரும் தேடுவதை எட்டும்வரை தொடர்ந்திருக்கும் பாடு நாடியதை எட்டியபின் நாளையென்ன? தேடு! வீசுபுயல் நிலநடுக்கம் வந்துப்போகும் பூமி ஏசுதலே இல்லாமல் வாழ்ந்தவன்யார் காமி தேசமெல்லாம் புகழ்ந்தாலும் தீமைசெய்வான் ஒருவன் கூசாமல் கடமை செய்யக் கற்றவனே தலைவன்! ஆயிரமாய் தடைகள்வரும் ஆனபோதும் முயல்க காயங்களை மறந்துவிட்டு கருதியதை அடைக நோய்மனது கொண்டவரின் தொல்லைகளை மறந்து வாய்ப்புகளைத் தொடர்ந்து சென்று வெற்றிகளைப் பெறுக! ...

பயங்கொள்ளாமல் இயங்கு

மின்னல் கிழித்த கோடுக ளெல்லாம் மழையின் கோலங்கள் ஆகும் செந்நெல் செழித்த வயல்களின் நடுவே தென்றல் கோலங்கள் போடும் தன்னில் பிறந்த எண்ணக் கோடுகள் சிந்தனைக் கோலங்கள் ஆகும் இன்னும் இன்னும் உள்ளே அமிழ எண்ணங்கள் இமயம் ஆகும்! பொன்னுடன் வாழ்க்கை பொருளுடன் வாழ்க்கை புகழுடன் எல்லாம் சரிதான் என்னென்ன தேடல் எனினும் எல்லாம் தன்னிறைவடையும் வரைதான் “என்னுடன்” என்கிற எண்ணத்தின் எல்லையை எட்டிடும் நொடிதான் நிறைவு பொன்னினும் விலைமிகு பொருளினை உள்ளே பார்க்கிற வாழ்வே பொலிவு! ...

உறியடி வாழ்க்கை

குறிக்கோள் நோக்கிப் பயணம் போகையில் கனவுகள் குதிரைகள் ஆகும் குதிரையை சுண்டிக் கிள்ம்பிடு தோழா கருதிய எதுவும் கைகூடும் மறிக்கும் தடைகளை அகற்றும் சக்தி மனிதனின் கனவுக்குண்டு மயக்கம் தயக்கம் முற்றிலும் நீக்கி முயன்றால் வெற்றிகள் உண்டு தறியின் சுதியின் தாள் கதியில் இழைகள் நெசவும் ஆகும் கவின் சுதியில் செயல்கள் பிறந்தால் காலம் உன்பெயர் கூறும் உறியடிக்கான வழுக்கு மரமாய் உள்ளது தம்பி உலகம் உந்தி உந்தி மேலேஏறு உலகம் உன்னைப் புகழும். ...

முயற்சி வேண்டும்

அசையாமல் நீயிருக்க யோகியுமல்ல! அப்படியே உட்காரப் பாறையுமல்ல! திசையாவும் திரிகின்ற பறவையைப் பார் நீ! திரிந்தலைய அதன் தேவை கோடி செல்வமா? விசை வேண்டும் நம்முடற்கு வீணில் கிடப்பதா? வேலையொன்றும் செய்யாமல் சோம்பி இருப்பதா? இரும்பு கூடத் தரைகிடந்தால் துருப்பிடிக்குமாம் விரும்பு எதையும் செய்ய விரும்பு விடிவு காணலாம் வேலை யாவும் சுமைகளல்ல சுகமும் காணலாம் கரும்பு போல வாழ்வை மாற்றக் கடமை யாற்றுவாய்! காலநேரம் பார்த்தி டாமல் உழைப்பில் மூழ்குவாய். தண்ணீரில் சிறகடித்தால் அலையில் மிதக்கலாம் ...

மனிதம் வாழ்க!

காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணிறிவும் வளரும்போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது? தூக்கிலிடும் சட்டத்தை பலதேசங்கள் தூக்கியெறிந்தே இங்கு தூய்மை ஆச்சு ஆக்கமுடன் அகிம்சையினைத் தந்த நாட்டில் அடிப்படைகள் மாற்றிவைத்தால் என்ன பேச்சு? தூக்கமில்லா சிறைவாழ்க்கை நெடுநாள் தந்தார் தொலைந்துவிட்ட காலத்தைக் கணக்கில் பார்த்தால் மூவருக்கு மட்டுமல்ல! ...
More...More...More...More...