Blog

/Blog

உடனே செய்து விடு

பூமியின் ஆயுள் என்னவென்றே -சிலர் புலம்பித் தள்ளிடுவார் சாமியின் ஆயுள் என்னவென்றும் – சிலர் சஞ்சலம் கொண்டிடுவார் ஆமிந்த உலகின் ஆயுளெல்லாம் நாம் ஆக்கும் செயல்களிலே தாமதம் இன்றி செயல்புரிந்தால் அவை தாமாய் நிலைத்திருக்கும் ஏதும் நிரந்தரம் இல்லையெனில் – அட ஏனிந்தப் பாடுகளும் வாதம் புரிந்திட நேரமில்லை – இந்த வாழ்வே ஆடுகளம் மோதிப் பார்ப்பதில் உள்ளசுகம் – அதை மேதைகள் உணர்ந்திருப்பார் ஏதும் செய்திட அறியாதோர் – தினம் ஏக்கத்தில் ஆழ்ந்திருப்பார் சின்னச் சின்ன ...

வெற்றி ரகசியம்

நேர்க்கோடுகளாய் நிமிர்ந்த வாழ்க்கையை யாரோ வளைத்தால் அது அகங்காரம்! நீயாய் வளைத்தால் அது அலங்காரம்! வளைந்து கிடந்த வில்லை இராமன் நிமிர்த்த முயன்றான் அதுவரை நியாயம். ஒடித்தான்: என்செய்? அவன் அவதாரம்!! வளைந்து கிடக்கும் கேள்விக்குறியை நிமிர்ந்து நிற்கும் வியப்புக் குறியாய் நிகழ்த்திக் காட்டுதல் நல்ல அதிசயம் வாழ்வில் அதுதான் வெற்றி ரகசியம். அரைக்காற்புள்ளியோ அடுத்தது என்ன என்கிறதயக்கத்தை எடுத்துக் காட்டும் தொடர்ப் புள்ளியாகி தொலைந்ததை மீட்கும் நிறுத்தற்குறிகளால் நிகழும் வாழ்க்கையில் வருத்தத்தைக் கழித்தால் வெளிச்சம் பெருகும் ...

கடல்

தனித்தனியாய் நாமொரு துளி துளித்துளியாய் நாமொரு கடல் தனித்தனியாய் நாமொரு கனி கனி கனியாய் நாமொரு வனம் தனித்தனியாய் அனுபவங்கள் தொகுத்துவைத்தால் சரித்திரங்கள் தனித்தனியாய் சம்பவங்கள் தொகுத்துச் சொன்னால் சாதனைகள் தனித்தனியாய் தவத்திலிரு வரம்கிடைத்தால் பகிர்ந்துகொடு தனித்தனியாய் மூச்சடக்கு முத்தெடுத்தால் விலைக்குக் கொடு தனித்திருந்தால் முக்திவரும் தோள்கொடுத்தால் சக்திவரும் தனித்தனியாய் உலகமில்லை சேர்ந்திருந்தால் துயரமில்லை கடலெனவே எழுந்துவிடு கவலையெலாம் மறந்துவிடு தடைகளெல்லாம் நொறுங்கும்படி அலையலையாய் ஆற்றல்பெறு தீவுகளோ தேசமில்லை தனிமையிலே இனிமையில்லை வாழ்வதென்றே துணிந்துவிடு வெளியில்வந்து கலந்துவிடு ...

இதுநேரம்

காற்று நடக்கிற வான்வெளியில் – உன் கனவுகள் இருக்கும் பத்திரமாய் நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் – உன் நினைவில் இருக்கும் சித்திரமாய் கீற்று வெளிச்சம் படிந்தபின்னே – இருள் கூடாரங்கள் கலைத்துவிடும் ஆற்றல் அரும்பி வெளிப்பட்டால் – உன் ஆதங்கங்கள் தொலைந்துவிடும் தேடல்கள் இலக்கைத் தொடுவதற்கே – ஒரு தேதி இருக்கும் நிச்சயமாய் வாடும் நிலைகள் மாறிவிட – உன் வாழ்க்கை மலரும் உற்சவமாய் கூடுகள் அமைக்கிற பறவைக்கெல்லாம் – இந்த குவலயம் முழுவதுரும் இரைகிடைக்கும் வீடெனும் ...

சுகம்

விளையும் நிலத்தில் விதைகள் சுகம் வீணையின் நரம்பில் விரல்கள் சுகம் களைகள் களைந்த வயல்கள் சுகம் கனவுகள் நிறைந்த கண்கள் சுகம் முயல்வதில் வருகிற முனைப்பு சுகம் முத்திரை பதிக்கும் உழைப்பு சுகம் தயக்கங்கள் உடைக்கும் நினைப்பு சுகம் தொடரும் பணிகளின் களைப்பு சுகம் கனிவில் நெகிழ்கிற இதயம் சுகம் காலைதோறும் உதயம் சுகம் தனிமையில் வருகிற தெளிவு சுகம் தடைகளை உடைக்கும் வலிவு சுகம் திட்டங்கள் தீட்டும் கூர்மை சுகம் தனக்கே தெரியும் நேர்மை சுகம் ...

வரைபடம்

வானம் எனக்கென வரைந்து கொடுத்த வரைபடம் ஒன்றுண்டு நானே என்னைத் தேடி அடைந்திட நேர்வழி அதிலுண்டு ஊனெனும் வாகனம் ஒட்டி மகிழ்வது ஒருதுளி உயிராகும் ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது எங்கோ அதுபோகும் மாற்று வழிகளில் புகுந்தவன் வந்தேன் மறுபடி கருப்பைக்கு நேற்று வரைக்கும் நான்செய்த எல்லாம் நிரம்பும் இரைப்பைக்கு கீற்றென எழுகிற வெளிச்சத்தின் வகிடு கிழக்கே நீள்கிறது. ஊற்றெழும் அமுதம் ததும்பும் கோப்பை உள்ளே வழிகிறது பொன்னை எண்ணிப் பூமியைத் தோண்ட பூதம் வருகிறது ஜன்னல் ...
More...More...More...More...