Blog

/Blog

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

2.“முடியாது” என்று சொல்லமுடிகிறதா உங்களால்? “ஓ! அப்படீங்களா… அதுக்கென்ன பண்ணிடலாம்! நிச்சயம்! என்னங்க. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை! உங்களுக்குச் செய்யலாமா? நல்லதுங்க.. வெச்சுடறேன்!” தொலைபேசியை வைத்த மாத்திரத்தில், “வேற வேலை இல்லை! இருக்கிற வேலை போதாதுன்னு இது வேறே” என்று முணுமுணுத்துக்கொண்டே புதிய வேலை ஒன்றை வேண்டா வெறுப்பாகத் தொடங்குபவரா நீங்கள்? அப்படியானால், “முடியாது” என்று சொல்லமுடியாதவர் நீங்கள். பெரும்பாலும், மற்றவர்கள் தவறாக எண்ணிக்கொள்வார்கள் என்கிற பயத்தில்தான் நம்மால்முடியாத வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு கொண்டு சிரமப்படுகிறோம். “நீங்க ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 18 “அலுவலகத்தில் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் என்னைப் பதற்றமடையச் செய்கின்றன” என்றார், என்னைச் சந்தித்த ஒரு நண்பர். கருத்துவேறுபாடுகள் தவறானதல்ல. தனி மனிதர்கள் ஒரே இடத்தில் சேரும்போது, ஒரேவிதமான கருத்தைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. ஆனால், கருத்து வேறுபாடுகள் வீண் பிடிவாதத்தாலோ அகங்காரத்தாலோ விளைந்தால், அது அலுவலக சூழலைப் பாதிக்கும். கருத்துவேறுபாடுகளில் பெரும்பான்மையானவை தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகவே ஏற்படுகின்றன. கணவன் மனைவி இருவரும் காரில் போய்க் கொண்டிருந்தனர். கணவரைப் பார்த்து, “சோர்வாக இருக்கிறீர்களே! காபி ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 17 “மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாமல் மெய்யாள வந்த பெருமான்” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை முருகக் கடவுளைப் பற்றி எழுதினார். இது முருகனுக்குப் பொருந்தும். முதலாளிக்கும் பொருந்துமா? இந்த சந்தேகம் அலுவலக நிர்வாகங்களில் அடிக்கடி எழக்கூடியதுதான். தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை நணபர்களாக்கிக் கொள்வதோ, மேலதிகாரிகளை நண்பர்களாக்கிக் கொள்வதோ அலுவலகச் சூழலுக்கு அவசியம்தானா? இது குறித்து மேலைநாடுகளில் பெரும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. 1982இல், மார்ட்டிமர்ஃபீன்பர்க் என்கிற உளவியல் ஆய்வாளர் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 16 அலுவலகத்தில் ஏற்படும் அத்தனை சிக்கல்களையும் சீரமைக்க கைதேர்ந்த நிர்வாகிகள் கையாளும் ஒரே அஸ்திரம், மதித்தல். ஒவ்வொரு தனிமனிதரும் எதிர்பார்ப்பது தனக்கும், தான் வகிக்கும் பொறுப்புக்கும் உரிய மரியாதையைத்தான். அதனை மனதாரத் தருவதற்குத் தயாராகும்போது அலுவலகத்தில் இணக்கமான சூழல் ஏற்படுகிறது. ஒரே குழுவாக இணைந்து செயல்பட வேண்டிய அலுவலகத்தில் சிறுசிறு குழுக்கள் தலைதூக்கும் “கோஷ்டி அரசியல்” நடப்பதுண்டு. இந்தச் சூழ்நிலை தவிர்க்கப்படும்போது, அலுவலர்களின் செயல்திறன் கூடும். அலுவலர்கள் மத்தியில் இணக்கமான சூழ்நிலை ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 15 நட்பு, காதல் போன்ற தனிமனித உறவுகள், அன்பு காரணமாய் நம் இயல்புக்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடும். ஆனால், ஒருவர் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் கையாள வேண்டிய உறவுகளில் மிக முக்கியமானது அலுவலகச் சூழலில் ஏற்படும் உறவுகள். தனிமனிதனின் உளவியல் பாங்கை, உளவியல் அறிஞர்கள் இரண்டாகப் பிரிப்பதுண்டு. தனிமைச் சூழலில் தனிமனிதன், சமூகச் சூழலில் தனிமனிதன். சமூகச் சூழலில் முக்கியமானது அலுவலகச் சூழல். இந்த உறவுகள் சரியாகக் கையாளப்படாதபோது இரண்டு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!

நமது வீட்டின் முகவரி – 14 கடந்த அத்தியாயத்தில் காதலுக்காக உயிரை விடுவதுதான் புனிதமா என்கிற கேள்வியை எழுப்பி இருந்தேன். நட்பானாலும் காதலானாலும், அது வாழ்க்கைக்குத்தான் நம்மை தயார்ப்படுத்த வேண்டும். ஓர் உறவு முறிகிறதென்றால் அங்கே தேர்வு செய்த நபர் தவறானவர் என்று அர்த்தம். காதலே தவறானது என்று அர்த்தமல்ல. எனவே, இவர்கள் தோற்பதால் காதலின் புனிதம் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. காதலின் பெயரால் உயிர்கள் பலியாகும்போதுதான் காதலின் புனிதம் கெடுகிறது. இப்படி யோசிப்போம். காதல் எதை நோக்கி ...
More...More...More...More...